செய்திகள்
நாமக்கல்லில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி
நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் மாநில துணைத் தலைவரும், சென்னை கோட்ட ஊடக பிரிவின் பொறுப்பாளரும், சக்தி கல்வி கலாசார அறக்கட்டளையின் தலைவருமான சக்திவேல் தலைமை தாங்கினார்.
நாமக்கல் பெருமாள் ஏஜென்சியின் உரிமையாளர் பிரபு முன்னிலை வகித்தார். இதில் 50 பேருக்கு இலவச கேஸ் இணைப்பிற்கான அடையாள அட்டைகளைஅமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் துணைத் தலைவர் சக்திவேல் வழங்கினார். நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை பெத்தண்ணா ஏஜென்சியின் உரிமையாளர் மோகன், எருமப்பட்டி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பாஸ்கரன், அகில இந்திய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. கூட்டமைப்புகளின் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் மாநில துணைத் தலைவரும், சென்னை கோட்ட ஊடக பிரிவின் பொறுப்பாளரும், சக்தி கல்வி கலாசார அறக்கட்டளையின் தலைவருமான சக்திவேல் தலைமை தாங்கினார்.
நாமக்கல் பெருமாள் ஏஜென்சியின் உரிமையாளர் பிரபு முன்னிலை வகித்தார். இதில் 50 பேருக்கு இலவச கேஸ் இணைப்பிற்கான அடையாள அட்டைகளைஅமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் துணைத் தலைவர் சக்திவேல் வழங்கினார். நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை பெத்தண்ணா ஏஜென்சியின் உரிமையாளர் மோகன், எருமப்பட்டி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பாஸ்கரன், அகில இந்திய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. கூட்டமைப்புகளின் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.