செய்திகள்

அரக்கோணம் அருகே பைக் விபத்தில் விவசாயி பலி

Published On 2018-06-15 11:24 GMT   |   Update On 2018-06-15 11:24 GMT
அரக்கோணம் அருகே பைக் விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த நாகவேடு சி.எஸ்.ஐ. பள்ளி தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 73). விவசாயி.

சுந்தர்ராஜன் நேற்று இரவு வீட்டில் இருந்து பைக்கில் நெமிலி நோக்கி சென்று கொண்டிருந்தார். சம்பத்ராயன்பேட்டை அருகே பைக் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் சுந்தர்ராஜன் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News