செய்திகள்

ஈரோடு மாவட்ட கர்நாடக மாநில எல்லையில் பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு

Published On 2018-04-06 22:44 IST   |   Update On 2018-04-06 22:44:00 IST
கன்னட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த சம்பவம் தாளவாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தாளவாடி பஸ் நிலையம் எதிரே தி.மு.க. கம்யூனிஸ்டு நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது நாம் தமிழர் கட்சியினர் மட்டும் தனியாக பிரிந்து தாளவாடி தபால் நிலையம் அருகே திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதை சிறிதும் எதிர்பாராத போலீசார் அங்கு ஓடி சென்றனர்.

அங்கு எரிந்து கொண்டிருந்த மோடி உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்போது மோடியை கண்டித்து கோ‌ஷங்களை முழங்கிய நாம் தமிழர் கட்சி பொன்குமார் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

கன்னட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த சம்பவம் தாளவாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Similar News