செய்திகள்

மந்தாரக்குப்பத்தில் பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2018-02-09 19:34 IST   |   Update On 2018-02-09 19:34:00 IST
மந்தாரக்குப்பத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி வீடு திரும்பாததால் இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் சேப்பளா நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் உமா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று உமா பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து சிவக்குமார் மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார். #tamilnews

Similar News