செய்திகள்
கடலூரில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்த போவதாக வெளியான தகவலால் கடலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடலூர்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிரிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலும் விருத்தாசலம், சிதம்பரம், விழுப்புரம் போன்ற இடங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தபோவதாக வலைத் தளங்களில் செய்தி பரவியது.
இதையொட்டி நேற்று கல்லூரி முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல் இன்றும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் பரவியது. அதனைத்தொடர்ந்து கல்லூரி வாசல் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்த்திய பஸ் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிரிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலும் விருத்தாசலம், சிதம்பரம், விழுப்புரம் போன்ற இடங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தபோவதாக வலைத் தளங்களில் செய்தி பரவியது.
இதையொட்டி நேற்று கல்லூரி முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல் இன்றும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் பரவியது. அதனைத்தொடர்ந்து கல்லூரி வாசல் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.