செய்திகள்

விருத்தாசலத்தை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும்: என்.ஆர்.தனபாலன்

Published On 2018-01-23 12:18 GMT   |   Update On 2018-01-23 12:18 GMT
விருத்தாசலத்தை தலைமையாக கொண்டு தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் தர்மராஜ், மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயர்மட்ட குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாநில நிர்வாகிகள் ஆசைத்தம்பி, விஜயமாரி, அரசன், சிவக்குமார், பாலாஜி, ஜோசப் ஆரோக்கிய ராசய்யா, ராமர், காளியப்பன், மாவட்ட செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் கருப்பையா, நகர தலைவர் பரமசிவம், நகர செயலாளர் பூமணி, பொருளாளர் பழனி, நாடார் உறவின் முறை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு இதுவரை இல்லாத அளவிற்கு பஸ் கட்டணத்தை 60 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தவிர்க்க பஸ் கட்டண உயர்வை அரசு உடனே திரும்ப பெற வேண்டும். பஸ் கட்டணத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கட்சி கலந்து கொள்ளும்.

விருத்தாசலத்தை தலைமையாக கொண்டு தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள 2 தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையை வழங்கவில்லை.

அதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News