நெய்வேலியில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மேலக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவரது மனைவி தங்கபாப்பு (60). இவர்களது மகள் செல்வராணி. அவரது கணவர் அண்ணாதுரை ஆகியோர் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அண்ணாதுரை தனது மனைவி செல்வராணியிடம் தகராறு செய்து வந்தார். அதே போல் நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு நடந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை, தனது மனைவி செல்வராணியை தாக்கினார். இதைப்பார்த்த செல்வராணியின் தாய் தங்கபாப்பு இதனை தட்டிக் கேட்டார்.
அப்போது அருகில் கிடந்த கட்டையை எடுத்து அண்ணாதுரை தனது மாமியார் தங்கபாப்புவின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தங்கபாப்பு நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர். #tamilnews