செய்திகள்

சேலம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2017-12-29 11:30 GMT   |   Update On 2017-12-29 11:30 GMT
திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 34). பி.எஸ்.சி. மைக்ரோ பையாலஜி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் வீட்டில் இருந்து வந்தார்.

தந்தை இறந்த நிலையில் 34 வயதாகியும் இது வரை ராஜவேலுக்கு திருமணமும் ஆக வில்லை. இதனால் மனம் உடைந்த ராஜவேல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News