செய்திகள்
ஈரோட்டில் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலி
ஈரோடு அருகே கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன் - மனைவி பலியாயினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவரது மனைவி ராஜம்மாள் (58).
ஈரோடு பி.பி. அக்ரகாரத்தில் இருந்து கனி ராவுத்தர் குளம் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கணவன்- மனைவி அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூக்குரலிட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜம்மாள் இறந்து விட்டதாக கூறினார். முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். ராஜம்மாள்-முனுசாமி உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவரது மனைவி ராஜம்மாள் (58).
ஈரோடு பி.பி. அக்ரகாரத்தில் இருந்து கனி ராவுத்தர் குளம் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கணவன்- மனைவி அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூக்குரலிட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜம்மாள் இறந்து விட்டதாக கூறினார். முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். ராஜம்மாள்-முனுசாமி உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.