செய்திகள்
விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கலைமணி (வயது 11). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். அதேபகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ராசாத்தி (13). அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர்கள், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பினார்கள். பின்னர் நியினார் குளம் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதற்காக கலைமணி, ராசாத்தி 2 பேரும் சென்றனர்.
அப்போது குளத்தில் இருவரும் கை, கால்களை கழுவியதாக தெரிகிறது. இந்நிலையில், நிலைதடுமாறி குளத்தின் உள்ளே இருவரும் தவறி விழுந்தனர்.
குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால், அதில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கலைமணி (வயது 11). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். அதேபகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ராசாத்தி (13). அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர்கள், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பினார்கள். பின்னர் நியினார் குளம் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதற்காக கலைமணி, ராசாத்தி 2 பேரும் சென்றனர்.
அப்போது குளத்தில் இருவரும் கை, கால்களை கழுவியதாக தெரிகிறது. இந்நிலையில், நிலைதடுமாறி குளத்தின் உள்ளே இருவரும் தவறி விழுந்தனர்.
குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால், அதில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.