செய்திகள்

நெய்வேலி அருகே இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம்: திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது

Published On 2017-11-28 13:36 GMT   |   Update On 2017-11-28 13:36 GMT
நெய்வேலி அருகே இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுத்ததால் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா (வயது 23). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

சந்தியா ஊ.மங்கலம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நானும், முதணை பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் வேல்முருகன் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் பல இடங்களுக்கு சென்று வந்தோம்.

அப்போது வேல்முருகன் என்னிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனை தொடர்ந்து நான் அவரை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

மேலும் வேல்முருகனும், அவரது பெற்றோர் கோவிந்தசாமி-இளஞ்சியம் ஆகியோர் என்னை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வேல்முருகனை கைது செய்தனர்.
Tags:    

Similar News