செய்திகள்

சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2017-10-16 11:09 GMT   |   Update On 2017-10-16 11:09 GMT
சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது சத்தியமங்கலம் அடுத்த கொண்டமுத்தனூர் பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் கோபிநாத்(39), செல்வராஜ்(56), வடிவேல்(51), பிரகாஷ்(39), நடராஜன்(46), சுப்பிரமணி(50) என தெரிய வந்தது.

அவர்கள் 6 பேரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட் கட்டுகளையும், ரூ.9 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News