செய்திகள்

51 அடியில் தொடர்ந்து நீடிக்கும் பவானிசாகர் அணை

Published On 2017-08-03 10:51 GMT   |   Update On 2017-08-03 10:51 GMT
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு குடிநீருக்காக 165 கன அடி வீதமும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஊட்டி மலையில் கன மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் வரும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
Tags:    

Similar News