செய்திகள்
தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு 10 அமைச்சர்கள் மாலை அணிவிப்பு

Published On 2017-08-03 12:42 IST   |   Update On 2017-08-03 12:42:00 IST
இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி அரச்சலூர் ஓடாநிலையில் அரசு சார்பில் இன்று நடந்தது. அங்கு தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு:

இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அரசு சார்பில் இன்று நடந்தது.

இதற்காக இன்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், வி.சரோஜா, கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் ஓடாநிலைக்கு வந்தனர்.

தீரன் சின்னமலை மணிமண்டபத்துக்கு அவர்கள் சென்றனர். அங்கு தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், தென்னரசு, கே.வி. ராமலிங்கம், ராஜாகிருஷ்ணன், சிவ சுப்பிரமணி, ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் பலரும் மாலை அணிவித்தனர்.

தீரன் சின்னமலை மணிமண்டபம் அருகே தமிழக அரசின் துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் ஓடா நிலைக்கு வந்து தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓடா நிலைக்கு தலைவர்கள் பலர் வந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்ட போலீசார் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News