செய்திகள்
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் நேற்று சந்தித்த

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை: அன்புமணி ராமதாஸ்

Published On 2017-07-21 01:11 GMT   |   Update On 2017-07-21 01:11 GMT
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஆலந்தூர்:

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஜனாதிபதியை நேரில் சந்தித்து, நீட் தேர்வு பிரச்சினையால் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மனகுழப்பங்கள், கவலைகள் குறித்து விளக்கமாக பேசினேன். “தமிழகத்தில் 6 மாதத்திற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. உங்கள் பதவி காலம் முடிவதற்கு முன் மத்திய அரசிடம் பேசி சட்ட மசோதாவிற்கு முழுவடிவம் தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன்.

மத்திய அரசு சட்ட மசோதாவை அனுப்பினால் நிச்சயமாக செய்வேன் என்று என்னிடம் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் பிரச்சினையால் மோசமான சூழல் உள்ளது.

இந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வுகளை எழுதி உள்ளார்கள். 16 ஆயிரம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக் கிறார்கள். ஆனால் நீட் தேர்வில் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அரசிடம் உள்ள 3,372 மருத்துவ இடங்களில் 3 ஆயிரம் இடங்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் கிடைக்கும். மற்ற இடங்கள் தான் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைக் கும்.

இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும், தமிழகத்துக்கும் செய்யப்பட்டு உள்ள அநீதி. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பி விரைவில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை. அவர் தவறாக சொல்கிறார் என்பதை ஏற்கமுடியாது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். 
Tags:    

Similar News