கடலூரில் பரபரப்பு: ஆம்புலன்சில் திடீர் தீ
கடலூர்:
கடலூரை அடுத்த செல்லாங்குப்பத்தில் சாலையோரம் 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நின்று கொண்டு இருந்தது. அந்த ஆம்புலன்சில் ஆட்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் இன்று காலை திடீரென அந்த ஆம்புலன்சில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அருகே நின்று கொண் டிருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவ விடாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தீ எதனால் பிடித்தது? என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.