செய்திகள்
கிண்டி ரேஸ்கோர்சில் ஆட்டோ டிரைவர் கொலை
கிண்டி ரேஸ்கோர்சில் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
கிண்டி ரேஸ்கோர்ஸ், மடுவாங்கரை ஐந்து பர்லாங் சாலையில் குதிரைகள் பராமரிக்கும் இடம் உள்ளது. இங்குள்ள காலி மைதானத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மேலும் அவரது வயிறு கிழிக்கப்பட்டும் முகம் எரிக்கப்பட்டும் காணப்பட்டது.
முகம் முழுவதும் எரிந்து இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. உடல் கிடந்த இடம் அருகே கைப்பையும், சூட்கேசும் கிடந்தது.
மேலும் சுமார் 500 மீட்டர் தூரத்தில் நுழைவு வாயில் அருகே ஆட்டோ ஒன்றும் கேட்பாரற்று நின்றது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
ஆட்டோவில் உரிமையாளர் பெயர் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்று எழுதப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஆர்.சி. புத்தகத்தில் வேளச்சேரியை சேர்ந்த சேர்மத்துரை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை வைத்து போலீசார் விசாணையை தொடங்கினர். இதில் கொலையுண்ட வாலிபர் மடுவாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் என்பதை உறுதி படுத்தி உள்ளனர். அவரை நண்பர்களே மதுகுடிக்க அழைத்து வந்து தீர்த்து கட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.
மோகனின் நண்பர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிண்டி ரேஸ்கோர்சில் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிண்டி ரேஸ்கோர்ஸ், மடுவாங்கரை ஐந்து பர்லாங் சாலையில் குதிரைகள் பராமரிக்கும் இடம் உள்ளது. இங்குள்ள காலி மைதானத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மேலும் அவரது வயிறு கிழிக்கப்பட்டும் முகம் எரிக்கப்பட்டும் காணப்பட்டது.
முகம் முழுவதும் எரிந்து இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. உடல் கிடந்த இடம் அருகே கைப்பையும், சூட்கேசும் கிடந்தது.
மேலும் சுமார் 500 மீட்டர் தூரத்தில் நுழைவு வாயில் அருகே ஆட்டோ ஒன்றும் கேட்பாரற்று நின்றது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
ஆட்டோவில் உரிமையாளர் பெயர் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்று எழுதப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஆர்.சி. புத்தகத்தில் வேளச்சேரியை சேர்ந்த சேர்மத்துரை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை வைத்து போலீசார் விசாணையை தொடங்கினர். இதில் கொலையுண்ட வாலிபர் மடுவாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் என்பதை உறுதி படுத்தி உள்ளனர். அவரை நண்பர்களே மதுகுடிக்க அழைத்து வந்து தீர்த்து கட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.
மோகனின் நண்பர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிண்டி ரேஸ்கோர்சில் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.