செய்திகள்

தர்மபுரி அருகே அரசு பஸ் மோதி காய்கறி வியாபாரி பலி

Published On 2017-07-01 12:03 GMT   |   Update On 2017-07-01 12:03 GMT
தர்மபுரி அருகே அரசு பஸ் மோதி காய்கறி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் கொல்ல கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்   (வயது 40). இவர் காய்கறி மொத்த வியாபாரி.

நேற்று இரவு இவர் காரிமங்கலத்தில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி அதனை மினிலாரியில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு, பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இரவு 8 மணி அளவில் கெரகோடஹள்ளி என்ற இடத்தின் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென சரவணன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News