செய்திகள்
அந்தியூர் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
அந்தியூர் அருகே இன்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மாத்தூர், மாரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் குமாரசாமி (வயது23).
இவருக்கும் திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த அம்மாசை மகள் கவுசிகா(17) என்பவருக்கும் இரு வீட்டு பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்தனர்.
இன்று மாத்தூர் மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு குமாரசாமிக்கும், கவுசிகாவுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினர்களும், நண்பர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டு உறவினர்களும் ஈடுப்பட்டிருந்தனர்.
திருமணம் குறித்து அந்தியூர் தாசில்தார் செல்லைய்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நிலவருவாய் ஆய்வாளர் ஜமுனாராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து பெண் வீட்டார் எங்கள் மகள் திருமணத்தை 18 வயதுக்கு பிறகு நடத்தி கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு திருப்பூர் சென்றனர். இதனால் சிறுமி திருமணம் தடுத்த நிறுத்தப்பட்டது. இதனால் கல்யாண வீடு களை இழந்தது. இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மாத்தூர், மாரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் குமாரசாமி (வயது23).
இவருக்கும் திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த அம்மாசை மகள் கவுசிகா(17) என்பவருக்கும் இரு வீட்டு பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்தனர்.
இன்று மாத்தூர் மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு குமாரசாமிக்கும், கவுசிகாவுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினர்களும், நண்பர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டு உறவினர்களும் ஈடுப்பட்டிருந்தனர்.
திருமணம் குறித்து அந்தியூர் தாசில்தார் செல்லைய்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நிலவருவாய் ஆய்வாளர் ஜமுனாராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து பெண் வீட்டார் எங்கள் மகள் திருமணத்தை 18 வயதுக்கு பிறகு நடத்தி கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு திருப்பூர் சென்றனர். இதனால் சிறுமி திருமணம் தடுத்த நிறுத்தப்பட்டது. இதனால் கல்யாண வீடு களை இழந்தது. இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.