செய்திகள்

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத்தேர்வுகளையும் இந்த அரசு சமாளிக்கும்: செங்கோட்டையன்

Published On 2017-06-25 16:22 IST   |   Update On 2017-06-25 16:22:00 IST
நீட் தேர்வு குறித்து அழுத்தம் தரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி:

கோபி வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அங்கு பல்வேறு அரசு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.-

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொது தேர்வுகளையும் சமாளிக்கும் வகையில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்காக கேள்வி தாள் அடங்கிய 54 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். நீட் தேர்வு குறித்து அழுத்தம் தரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றி எந்த தகவலும் வரவில்லை. கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. அதில் படகு இல்லம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வேட்டைக்காரன் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

Similar News