செய்திகள்
பெசன்ட்நகரில் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்
குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர்:
பெசன்ட்நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை நாட்டு பணம் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 11 லட்சத்து 89 ஆயிரம் ஆகும்.
அதனை தொழிலாளி உமா மீட்டு சாஸ்திரி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணத்தை வீசி சென்றவர்கள் யார்? கடத்தல் பணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.