செய்திகள்

பள்ளிக்கரணை அருகே குட்டையில் மூழ்கி மாணவர் பலி

Published On 2017-04-22 14:48 IST   |   Update On 2017-04-22 14:48:00 IST
பள்ளிக்கரணை அருகே குட்டையில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணை அருகே நுக்கம்பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் பரத்வாஜ் (17). 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவன் நண்பர்களுடன் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள குட்டையில் குளிக்க சென்றான். அப்போது ஆழமான பகுதியில் சென்றதால் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவன் பரத்வாஜ் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News