செய்திகள்

டி.என்.பாளையம் அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

Published On 2017-04-10 19:01 IST   |   Update On 2017-04-10 19:01:00 IST
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம், அடுத்த நஞ்சை புளியம்பட்டி, பரிசல் துறை வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது47). இவரது மனைவி சுமதி. சுமதி உடல் நலம் சரியில்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார். சக்திவேல் சமையல் வேலை பார்த்து வந்தார். அப்போது கடம்பூரை சேர்ந்த ஜோதி என்று பெண்ணுடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் நஞ்சை புளியம்பட்டி, பரிசல்துறை வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சக்திவேலும், ஜோதியும் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஜோதி சக்திவேலுடன் சண்டைபோட்டு கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

இதனால் சக்திவேல் மனவேதனையுடன் இருந்தார். சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து வீட்டின் உரிமையாளர் தங்கமணி சக்திவேல் வீட்டின் கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை.

இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவ்ல தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News