செய்திகள்
ஈரோடு லாட்ஜில் கோவை டி.வி.ஷோரூம் உரிமையாளர் தற்கொலை
ஈரோடு லாட்ஜில் கோவை டி.வி.ஷோரூம் உரிமையாளர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கோவை கருப்பையா வீதியை சேர்ந்தவர் சரவண குமார்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
சரவணகுமார் கோவையில் டி.வி.ஷோரூம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சரவண குமார் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சரவணகுமார் தனது அண்ணன் குட்டியுடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்குள்ள தனியார் லாட்ஜில் சரவணகுமாரும், அவரது அண்ணன் குட்டியும் தனித்தனி அறைகள் எடுத்து தங்கினர்.
குட்டி சாப்பிடுவதற்காக தனது தம்பி அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குட்டி லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமார் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சரவணகுமார் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனினும் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கருப்பையா வீதியை சேர்ந்தவர் சரவண குமார்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
சரவணகுமார் கோவையில் டி.வி.ஷோரூம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சரவண குமார் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சரவணகுமார் தனது அண்ணன் குட்டியுடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்குள்ள தனியார் லாட்ஜில் சரவணகுமாரும், அவரது அண்ணன் குட்டியும் தனித்தனி அறைகள் எடுத்து தங்கினர்.
குட்டி சாப்பிடுவதற்காக தனது தம்பி அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குட்டி லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமார் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சரவணகுமார் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனினும் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.