செய்திகள்

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி பக்தர் பலி

Published On 2017-04-05 16:37 IST   |   Update On 2017-04-05 16:37:00 IST
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் பழனிக்கு பாதயாத்திரை சென்ற வழியில் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடுமுடி:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த பாகாநத்தம் குண்டாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவகுமார்(வயது21). சிவகுமாரும் அவரது உறவினர்களும் மற்றும் ஊர்க்காரர்கள் சிலரும் பழனிக்கு பாதயாத்திரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது கொடுமுடி மணல்மேடு காவிரி ஆற்றில் உள்ள அகத்தியர்பாறை அருகே சிவக்குமாரும், அவரது உறவினர்களும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது சிவக்குமாருக்கு திடீரென ஜன்னி ஏற்பட்டு நீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் உறவினர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்த சிலரும் வேகமாக நீந்தி சென்று சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு சிவக்குமார் உறவினர்களும், ஊர்க்காரர்களும் கதறி அழுதனர்.

இது குறித்து கொமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பாதயாத்திரைக்கு வந்த இடத்தில் வாலிபர் உறவினர்கள் கண்முன்னே ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News