செய்திகள்

வேதாரண்யத்தில் தனியார் பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

Published On 2017-03-22 18:54 IST   |   Update On 2017-03-22 18:54:00 IST
வேதாரண்யத்தில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 55) இவர் லாரியில் லோடு ஏற்றும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கருப்பம்புலம் மெயின் ரோடு கைகாட்டி அருகே லாரியில் சவுக்குமரத்தை லோடு ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையை கடக்க முயன்ற போது பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியார் பஸ் காசிநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காசிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வேதாரண்யத்தில் இருந்து இன்று காலை ஆறுகாட்டுத்துறைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேலியில் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Similar News