செய்திகள்

தனியார் பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது

Published On 2017-03-18 17:52 IST   |   Update On 2017-03-18 17:52:00 IST
சீர்காழி மது விலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை கைது செய்தனர்.

தரங்கம்பாடி:

சீர்காழி மதுவிலக்கு போலீசார் நந்தலாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

பஸ்சில் வந்த காரைக்கால் திருநகரியை சேர்ந்த சூரணா (30) மற்றும் 14 வயது இளம் பெண் ஆகியோர் 160 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News