செய்திகள்

பைக் மீது லாரி மோதல்: வாலிபர் படுகாயம்

Published On 2017-03-17 16:57 GMT   |   Update On 2017-03-17 16:57 GMT
பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி திசைகாவல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது பைக்கில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவரது உறவினரான சுரேஷ்குமார் என்பவர் உடன் சென்றுள்ளார்.

தெற்கு ஆத்தூர் பஜாரில் செல்லும்போது டாரஸ் லாரி ஒன்று இவர்களை முந்திச் சென்றுள்ளது. அப்போது லாரியின் பின் பகுதி  இடித்ததால் நிலை குலைந்த பைக் கீழே விழுந்தது. இதில் கணேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

Similar News