செய்திகள்

வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2017-03-15 21:47 IST   |   Update On 2017-03-15 21:47:00 IST
வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக் குட்பட்ட சர்வகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சநதிக்குளத்தைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஸ்வினி என்ற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது.

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று தனது தாயார் வீட்டில் இருந்து வந்தார். இதில் குழந்தை அஸ்வினி தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இந்துமதி மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த இந்துமதியை முருகேசன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு தாயார் வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளார்.

இந்துமதிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்ட அவர் வீட்டில் வி‌ஷ மருந்தை எடுத்து குடித்து விட்டாராம். அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து இந்துமதியின் தாயார் முத்துலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தனி விசாரணை மேற்கொண்டார்.

Similar News