செய்திகள்

திருக்கடையூரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது

Published On 2017-03-06 15:44 IST   |   Update On 2017-03-06 15:44:00 IST
திருக்கடையூரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் நேற்று இரவு திருக்கடையூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 515 மதுபாட்டில்களை கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் சீர்காழி தாலுக்கா புதுப்பட்டினத்தை சேர்ந்த சோமு மகன் அய்யப்பன் (வயது 30) என்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் முருகவேல் மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

Similar News