செய்திகள்
தைவான் நாட்டை சேர்ந்த தம்பதிக்கு தமிழ் கலாசாரபடி திருமணம்
சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் தைவான் நாட்டை சேர்ந்த தம்பதிக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
சீர்காழி:
தைவான் நாட்டை சேர்ந்த மெளலுங்ச்சுவான்ச்சென் தம்பதியினர் தமிழ் கலாச்சாரபடி திருமணம் செய்ய முடிவு செய்து ஒளிலாயத்திற்கு வந்தனர். ஒளிலாய நிர்வாகி நாடி ராஜேந்திரா சுவாமி தலைமையில் சிவாச்சாரியார்கள் அருண், முத்துகுமார், சங்கர் ஆகியோர் ஆகம விதிமுறையில் தமிழ் கலாச்சாரபடி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். பின்பு மணமகன்-மணமகள் ஆகியோருக்கு பொது மக்கள் மொய் எழுதினர். பின்பு அங்குள்ள 18 சித்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை மாமல்லன், நாடி முத்து, திருஞானம், சிலம்பு, காளிதாஸ் செய்திருந்தனர்.
தைவான் நாட்டை சேர்ந்த மெளலுங்ச்சுவான்ச்சென் தம்பதியினர் தமிழ் கலாச்சாரபடி திருமணம் செய்ய முடிவு செய்து ஒளிலாயத்திற்கு வந்தனர். ஒளிலாய நிர்வாகி நாடி ராஜேந்திரா சுவாமி தலைமையில் சிவாச்சாரியார்கள் அருண், முத்துகுமார், சங்கர் ஆகியோர் ஆகம விதிமுறையில் தமிழ் கலாச்சாரபடி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். பின்பு மணமகன்-மணமகள் ஆகியோருக்கு பொது மக்கள் மொய் எழுதினர். பின்பு அங்குள்ள 18 சித்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை மாமல்லன், நாடி முத்து, திருஞானம், சிலம்பு, காளிதாஸ் செய்திருந்தனர்.