செய்திகள்

வேதாரண்யத்தில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2017-03-04 16:13 IST   |   Update On 2017-03-04 16:13:00 IST
வேதாரண்யத்தில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

வேதாரண்யம்:

தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. தஞ்சை திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.

இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் இன்று காலை 8 மணி வரை 50.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.நாகையிலும் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை மழை பெய்தது.

Similar News