செய்திகள்
சீர்காழியில் சிறுவனிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது
சீர்காழியில் சிறுவனிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி திருத்தாள முடையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவரது பேரன் கிசாந்த் நேற்று வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன் அணிந்திருந்த 1 பவுன் தங்கசெயினை மர்ம நபர் பறித்து சென்று விட்டான். இதுபற்றி சேகர் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வில்சன், வசந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வழியாக சென்ற சீர்காழி இரணியன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முபாரக் அலி (23) என்பவர் குழந்தையிடமிருந்து செயினை பறித்து சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.