செய்திகள்

மயிலாடுதுறையில் இன்று பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-03-03 16:17 IST   |   Update On 2017-03-03 16:17:00 IST
மயிலாடுதுறையில் இன்று அதிகாலை பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு எடத் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லெட்சுமி (65). கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார்.

இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து இருந்தார். ஆனால் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. அதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இன்று அதிகாலை லெட்சுமி தனது வீட்டின் பின்புறத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலே இறந்தார்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாதேவன் சம்பவ இடத்திற்கு சென்று லெட்சுமி பிணத்தை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News