செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2017-03-02 15:49 IST   |   Update On 2017-03-02 15:49:00 IST
மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மயிலாடுதுறை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் களம் இறங்கி உள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பூம்புகார் அரசு கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள்-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கும்பகோணத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே இங்குள்ள கல்லூரிகள் முன்பும் முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News