செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
கடந்த 1991-ம் ஆண்டே இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியிருந்தாலும் அதன் செயலாக்கம் மற்றும் தாக்கம் குறித்த தகவல் தற்போதுதான் முழுமையாக தெரியவந்துள்ளது.
இதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விவசாயிகளின் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து அங்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டியிருப்பதே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது.
இயற்கை எரிவாயு திட்டம் குறித்து முழுமையாக அறிந்த நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் கொதித்தெழுந்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளை நிலங்கள் அழியும், குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போராட்டம் தீவிரமானது.
கடந்த 16-ந்தேதி போராட்டத்தை தொடங்கிய நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். அதன் பிறகு கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் தீவிரம் அடைந்தது. 19-ந்தேதி நெடுவாசல் கிராமத்தை நோக்கி இளைஞர்கள், மாணவர்கள், சென்னையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுத்து திரண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை போல் நெடுவாசல் கிராமத்திலும் ஒரு தன்னெழுச்சி போராட்டம் உருவானது. இதன் உச்சகட்டமாக 100 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நெடுவாசலில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது, இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு அகல்விளக்கு ஏற்றியும், நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தி எதிர்ப்பை வெளிக்காட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினர்.
இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்தும் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு புதுக்கோட்டை வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதுகுறித்து கடந்த வாரம் தலைவர் சீனுசின்னப்பா தலைமையில் நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
குறிப்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவது இன்று தடைபட்டது. ஒட்டுமொத்த விவசாயிகள் மட்டுமின்றி வணிகர்கள், பொது மக்களும் தங்களை இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் நெடுவாசல் கிராமத்தை திரும்பி பார்க்க செய்துள்ளது. எனவே இனியும் மத்திய அரசு தாமதிக்காமல் உடனடியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
கடந்த 1991-ம் ஆண்டே இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியிருந்தாலும் அதன் செயலாக்கம் மற்றும் தாக்கம் குறித்த தகவல் தற்போதுதான் முழுமையாக தெரியவந்துள்ளது.
இதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விவசாயிகளின் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து அங்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டியிருப்பதே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது.
இயற்கை எரிவாயு திட்டம் குறித்து முழுமையாக அறிந்த நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் கொதித்தெழுந்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளை நிலங்கள் அழியும், குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போராட்டம் தீவிரமானது.
கடந்த 16-ந்தேதி போராட்டத்தை தொடங்கிய நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். அதன் பிறகு கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் தீவிரம் அடைந்தது. 19-ந்தேதி நெடுவாசல் கிராமத்தை நோக்கி இளைஞர்கள், மாணவர்கள், சென்னையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுத்து திரண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை போல் நெடுவாசல் கிராமத்திலும் ஒரு தன்னெழுச்சி போராட்டம் உருவானது. இதன் உச்சகட்டமாக 100 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நெடுவாசலில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது, இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு அகல்விளக்கு ஏற்றியும், நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தி எதிர்ப்பை வெளிக்காட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினர்.
இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்தும் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு புதுக்கோட்டை வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதுகுறித்து கடந்த வாரம் தலைவர் சீனுசின்னப்பா தலைமையில் நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
குறிப்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவது இன்று தடைபட்டது. ஒட்டுமொத்த விவசாயிகள் மட்டுமின்றி வணிகர்கள், பொது மக்களும் தங்களை இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் நெடுவாசல் கிராமத்தை திரும்பி பார்க்க செய்துள்ளது. எனவே இனியும் மத்திய அரசு தாமதிக்காமல் உடனடியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.