செய்திகள்

அரக்கோணத்தில் பைக் விபத்தில் வாலிபர் பலி

Published On 2017-02-13 12:20 GMT   |   Update On 2017-02-13 12:20 GMT
அரக்கோணத்தில் பைக் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது19). இவரது நண்பர்கள் லோகேஷ்(21), அலி(28) நேற்று முன்தினம் 3 பேரும் பைக்கில் காவனூர் ஏரிக்கரையில் சென்றனர்.

அப்போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த பாண்டியன்(21) என்பவர் நேருக்குநேர் மோதினர். இந்த விபத்தில் முத்துராமன் சம்பவ இடத்தில் இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அரக்கோணம் டவுன் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News