செய்திகள்

தஞ்சையில் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2017-02-10 11:49 GMT   |   Update On 2017-02-10 11:49 GMT
தஞ்சையில் தாய் திட்டியதால் கல்லூரி மாணவி எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அற்புதபுரம் மேல தெருவை சேர்ந்தவர் காமாட்சி. கூலி தொழிலாளி. இவருடைய மகள் சிவகாமி (வயது 20). இவர் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார். வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவகாமியை அவருடைய தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சிவகாமி தின்றார். இதையடுத்து வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவகாமி இறந்தார்.

இதுகுறித்து காமாட்சி வல்லம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜாரவி தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News