செய்திகள்

திருவையாறு அருகே அனுமதியில்லாமல் மது விற்றவர் கைது

Published On 2017-01-16 11:32 GMT   |   Update On 2017-01-16 11:32 GMT
திருவையாறு அருகே அனுமதியில்லாமல் மது விற்றவரை போலீசார் கைது செய்து 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே பெரமூர் தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் மணிமுடி (வயது 46). இவர் நேற்று மாலை 5 மணிக்கு செம்மங்குடி சுடுகாடு அருகில் அனுமதியில்லாமல் மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே ரோந்து சென்ற திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் அனுமதியில்லாமல் மது விற்றுக்கொண்டிருந்த மணிமுடியை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களைக் கைப்பற்றி, அவர்மீது வழக்குப் பதிவு செய்து, திருவையாறு மாஜிஸ்திரேட் சோமசுந்தரத்தின் முன் ஆஜர்படுத்தி மணிமுடியை 15 நாள் காவலில் ஜெயிலில் அடைத்தனர்.

Similar News