செய்திகள்

பெண்ணாடம் அருகே சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

Published On 2017-01-04 11:00 GMT   |   Update On 2017-01-04 11:00 GMT
பெண்ணாடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள மாப்புடையூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தனது தாயாரிடம் பணம் வாங்குவதற்காக சென்றார்.

பணம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளியில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் சிறுமியை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையதாக கூறப்படும். கல்லூரி மாணவரை தேடி வருகிறார்கள். அவர் கோவையில் படித்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Similar News