செய்திகள்

மதுரையில் இன்று மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Published On 2016-12-26 10:25 GMT   |   Update On 2016-12-26 10:25 GMT
வீட்டில் தனியா இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை அரசரடி பொன்மேனி நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சரசுவதி (வயது62). கணவர் இறந்து விட்டநிலையில் மகனுடன் சரசுவதி வசித்து வந்தார்.

இன்று காலை அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துககொண்டார்.

சிறிது நேரத்தில் உடல் கருகிய அவர் வேதனையில் கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சரசுவதி உடல் கருகி இறந்தார்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News