செய்திகள்

சிறுலூர் பகுதியில் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது

Published On 2016-12-16 11:28 GMT   |   Update On 2016-12-16 11:28 GMT
சிறுலூர் சுடுகாடு பகுதியில் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

சிறுவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுலூர் சுடுகாடு பகுதி முள்வேலிக் காட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் சிறுவலூர் பகுதியை சேர்ந்த குணசேகரன், தமிழரசு, பழனிச்சாமி, லோகநாதன் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ரூ.1,670 பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News