செய்திகள்
விருத்தாசலத்தில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் சாவு
விருத்தாசலத்தில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் பலியானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கலைவாணி (வயது 28). இவருக்கும் விருத்தாசலம் குட்டைக்காரத் தெருவை சேர்ந்த பாபுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாபு கூடுதல் வரதட்சணைகேட்டு கலைவாணியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலைவாணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் கலைவாணியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த தர்மலிங்கம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கலைவாணி இறந்தது தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து தர்மலிங்கம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் கலைவாணியின் சாவில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கலைவாணிக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். கலைவாணிக்கு 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
விருத்தாசலம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கலைவாணி (வயது 28). இவருக்கும் விருத்தாசலம் குட்டைக்காரத் தெருவை சேர்ந்த பாபுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாபு கூடுதல் வரதட்சணைகேட்டு கலைவாணியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலைவாணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் கலைவாணியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த தர்மலிங்கம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கலைவாணி இறந்தது தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து தர்மலிங்கம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் கலைவாணியின் சாவில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கலைவாணிக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். கலைவாணிக்கு 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.