செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் அரசு பஸ் மீது கல் வீச்சு: கண்ணாடி உடைப்பு
ஜெயலலிதா காலமானதையொட்டி நெல்லிக்குப்பத்தில் அரசு பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் கண்ணாடி உடைக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம்:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி தகவல் அறிந்ததும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் சாலைமறியல் நடந்தது.
இந்த நிலையில் பண்ருட் டியில் இருந்து கடலூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் நெல்லிக்குப்பம் அம்பேத்கார் நகர் அருகே வந்தது.
அப்போது மர்ம நபர்கள் பஸ்சை வழிமறித்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு கீழே இறங்கி அங்குமிங்குமாக ஓடினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேபோல் நெல்லிக் குப்பம் ஆலை ரோட்டில் உள்ள வாரச்சந்தைக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த காய்கறி கடை களை சூறையாடியது. அதோடு நிறுத்தாமல் அந்த கும்பல் கடைகளில் இருந்த காய்கறியையும் அள்ளிச்சென்றது.