செய்திகள்
கடலூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் எலக்ட்ரீசியன் தற்கொலை: போலீசார் விசாரணை
கடலூரில், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 66). எலக்ட்ரீசியன். இவர் நேதாஜி சாலை விநாயகர் கோவில் எதிரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ராஜமாணிக்கம் பெட்ரோல் கேனுடன், அப்துல்காதர் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வீட்டு முன்பு சென்றார்.
அங்கு திடீரென அவர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததால், வலி தாங்க முடியாமல் ராஜமாணிக்கம் அலறி துடித்தார். பின்னர் அவர், ராஜேந்திரன் வீட்டு முன்பகுதியில் உள்ள கேட்டை திறந்து உள்ளே சென்றார். அதற்கு மேல் செல்ல முடியாமல், இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த இடம் அருகே எரியும் நெருப்புடன் கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, ராஜமாணிக்கத்தின் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ராஜமாணிக்கம் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ராஜமாணிக்கம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து ராஜமாணிக்கத்தின் மகன் வேல்முருகன், கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.
அதில், தன்னுடைய தந்தை சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ராஜமாணிக்கம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 66). எலக்ட்ரீசியன். இவர் நேதாஜி சாலை விநாயகர் கோவில் எதிரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ராஜமாணிக்கம் பெட்ரோல் கேனுடன், அப்துல்காதர் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வீட்டு முன்பு சென்றார்.
அங்கு திடீரென அவர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததால், வலி தாங்க முடியாமல் ராஜமாணிக்கம் அலறி துடித்தார். பின்னர் அவர், ராஜேந்திரன் வீட்டு முன்பகுதியில் உள்ள கேட்டை திறந்து உள்ளே சென்றார். அதற்கு மேல் செல்ல முடியாமல், இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த இடம் அருகே எரியும் நெருப்புடன் கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, ராஜமாணிக்கத்தின் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ராஜமாணிக்கம் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ராஜமாணிக்கம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து ராஜமாணிக்கத்தின் மகன் வேல்முருகன், கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.
அதில், தன்னுடைய தந்தை சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ராஜமாணிக்கம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.