செய்திகள்
தாழ்வு நிலையாக வலுவிழந்த நடா புயல்: காரைக்கால் அருகே கரையை கடந்தது
தாழ்வு நிலையாக வலுவிழந்த நடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று வேகமாக வீசியது.
கடலூர்:
தென்கிழக்கு வங்க கடலில் கடந்த 29-ந் தேதி இலங்கைக்கு அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
அதைத்தொடர்ந்து மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த புதன்கிழமை புயலாக உருவானது. இதற்கு நடா புயல் என்று பெயரிடப்பட்டது. புயல் உருவானதையொட்டி தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான நடா புயலின் வேகத்தில் நேற்று காலையில் மாற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கடலூர் அருகே புயல் கரையை கடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவை மாநிலம் காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை புயல் கரையை கடந்தது.
இதையொட்டி காரைக்காலில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. காரைக்காலை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
புயல் இன்று காலை கரையை கடந்ததையொட்டி காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 38 பேர் வந்துள்ளனர். இதேபோல் கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் தாக்கியது. அப்போது லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து சேதமாகின. விளை நிலங்கள் நாசமானது. இந்த பாதிப்பை சீர் செய்ய ஒரு மாதத்துக்கும் மேல் ஆனது.
கடந்த ஆண்டு (2015) நவம்பர் மாதம் 7-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 9-ந் தேதி விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கொட்டித்தீர்த்த மழையினால் பண்ருட்டி பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பண்ருட்டி வீசூர் பகுதியில் 2 பேரும், பெரியக்காட்டுப்பாளை யத்தில் 9 பேரும் வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உருவான நடா புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனால் பொதுமக்களிடம் மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டது.
புயல் பாதிப்பை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடலூரில் முகாமிட்டு இருந்தனர். வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் அதிகாரிகள் கடலூரில் தங்கி இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். மீனவர்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று வேகமாக வீசியது. பெரிய அளவில் மழை ஏதும் இல்லை. கடலூரிலும் அதேபோல் லேசான காற்று மட்டுமே வீசியது. புயல் பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் தப்பியது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தென்கிழக்கு வங்க கடலில் கடந்த 29-ந் தேதி இலங்கைக்கு அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
அதைத்தொடர்ந்து மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த புதன்கிழமை புயலாக உருவானது. இதற்கு நடா புயல் என்று பெயரிடப்பட்டது. புயல் உருவானதையொட்டி தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான நடா புயலின் வேகத்தில் நேற்று காலையில் மாற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கடலூர் அருகே புயல் கரையை கடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவை மாநிலம் காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை புயல் கரையை கடந்தது.
இதையொட்டி காரைக்காலில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. காரைக்காலை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
புயல் இன்று காலை கரையை கடந்ததையொட்டி காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 38 பேர் வந்துள்ளனர். இதேபோல் கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் தாக்கியது. அப்போது லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து சேதமாகின. விளை நிலங்கள் நாசமானது. இந்த பாதிப்பை சீர் செய்ய ஒரு மாதத்துக்கும் மேல் ஆனது.
கடந்த ஆண்டு (2015) நவம்பர் மாதம் 7-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 9-ந் தேதி விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கொட்டித்தீர்த்த மழையினால் பண்ருட்டி பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பண்ருட்டி வீசூர் பகுதியில் 2 பேரும், பெரியக்காட்டுப்பாளை யத்தில் 9 பேரும் வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உருவான நடா புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனால் பொதுமக்களிடம் மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டது.
புயல் பாதிப்பை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடலூரில் முகாமிட்டு இருந்தனர். வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் அதிகாரிகள் கடலூரில் தங்கி இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். மீனவர்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று வேகமாக வீசியது. பெரிய அளவில் மழை ஏதும் இல்லை. கடலூரிலும் அதேபோல் லேசான காற்று மட்டுமே வீசியது. புயல் பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் தப்பியது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.