செய்திகள்

தர்மபுரி அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2016-11-24 12:56 GMT   |   Update On 2016-11-24 12:56 GMT
தர்மபுரி அருகே நடந்த விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கன்னப்பட்டி ராஜ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் என்ற பாண்டு (வயது 58).

இவர் தனது மொபட்டில் அருகில் உள்ள எருமைகாரன் கொட்டாய் பகுதியில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கிய அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற கிருஷ்ணாபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News