செய்திகள்

புளியங்குடி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2016-11-24 12:01 GMT   |   Update On 2016-11-24 12:02 GMT
புளியங்குடி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் மாரிராஜ். இவரது மகள் மகாலட்சுமி (வயது 20). இவர் சிந்தாமணியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த போது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News