செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2016-11-24 03:56 GMT   |   Update On 2016-11-24 03:57 GMT
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்: 16105/06) திண்டிவனத்திலும், யஷ்வந்த்பூர்-கொச்சுவேலி இடையே வாரம் 3 தடவையும் (12257/58), சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் இடையே வாராந்திரமாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (12697/98) திருவல்லாவிலும், புனலூர்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (56715/16) கழக்குட்டம் ரெயில் நிலையத்திலும் சோதனை கால அடிப்படையில் நின்று செல்லும்.

விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22869/70) தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தமாக 28-ந்தேதி முதல் இணைக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News