செய்திகள்
மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்: மேஸ்திரி பலி
மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்-பஸ் மோதலில் மேஸ்திரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
கோவிலம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (46) கட்டிட மேஸ்திரி ஆக இருந்தார். நேற்று மாலை அவர் மடிப்பாக்கம் கூட்டு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கீழ்கட்டளையில் இருந்து பிராட்வே வந்த அரசு டவுன் பஸ் மோதியது.
இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்டிரைவர் ராஜேஷ் (44) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.